Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: சென்னையில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த பேனர் சாய்ந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தை உழுக்கியது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக போன்ற கட்சிகளின் பேனர்களும், திருமணம் மற்றும் காதணி விழாவிற்கான பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் எச்சரித்திருந்தார். ஆனால், இந்த எச்சரிக்கையையும் மீறி, உசிலம்பட்டியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் பொதுமக்கள், பேனர்களை அகற்றுவதில் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.